sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

/

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி


ADDED : அக் 14, 2025 03:45 AM

Google News

ADDED : அக் 14, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் செய்யது அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.இ.எம்.அப்துல்லா நினைவாக அக்., 11, 12ல் மாநில, மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடந்தது.

இப்போட்டிகளில் மாநில அளவில் ஆண்கள் அணியினரும், மாவட்ட அளவிலான போட்டிகளில் பெண்கள் அணியினரும் கலந்து கொண்டனர். துவக்க விழாவில் கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்து பேசியதாவது:

விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கூடுதலாக இடம் ஒதுக்கி முன்னுரிமையை அரசு மற்றும் தனியார் துறைகள் வழங்கி வருகிறது.

மாணவர்கள் விளையாட்டு துறைகளிலும் உங்களின் கவனத்தை செலுத்தி வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றார்.

முதல்வர் பெரியசாமி வரவேற்றார். போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி முதலிடம், கோவை ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி இரண்டாமிடம், இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

பெண்களுக்கான பிரிவில் ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல் இடத்தையும், செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இரண்டாம் இடத்தையும், நம்மாழ்வார் வேளாண் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.7000, 3ம் பரிசாக ரூ.5000 வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவிற்கு முதல் பரிசாக ரூ.5000, 2ம் பரிசாக ரூ.3000, 3வது பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் சத்தியேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us