/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'
/
'இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'
'இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'
'இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'
ADDED : பிப் 15, 2025 05:55 AM
ராமநாதபுரம் : -இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தெரிவித்தார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதியதாக பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். அவர் பேசியதாவது:
மீனவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் உரிய காலத்தில் வழங்கப்படும். இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுப்படகு உரிமங்களை புதிப்பிக்காதவர்கள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். மோர்ப்பண்ணை பகுதியில் புயல் காப்பகம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
மீனவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் பாதுகாப்பாக மீன் பிடி தொழிலில் ஈடுபட வேண்டும் என்றார்.
மீன் வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, பருந்து கடற்படை தளத்தின் உதவி பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி, மீன் வளத்துறை உதவி இயக்குநர்கள் ஜெயக்குமார், கோபிநாத், சிவக்குமார் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

