ADDED : நவ 20, 2024 08:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம்செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி சார்பில்விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த ஊர்வலத்தை நகராட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்தார்.
நகைக்கடை பஜார் வழியாக மாணவர்களின் விழிப்புணர்வு கோஷங்களுடன் அரசு மகளிர் கலைக்கல்லுாரி வரை நடந்தது. மக்களுக்கு கழிப்பறை துாய்மையை வலியுறுத்தி நோட்டீஸ், சோப் வழங்கினர். பள்ளி நிர்வகாத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

