/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு
/
விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு
விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு
விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு
ADDED : நவ 19, 2025 03:53 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு விடுதியில் பள்ளி மாணவருக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 மாணவர்கள்,விடுதி வார்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவர் டி-பிளாக் ரோடு அம்மா பூங்கா அருகே உள்ள அரசு சமூக நீதி விடுதியில் தங்கி படிக்கிறார்.
இவரை ஒரு வாரமாக விடுதியில் உள்ள 3 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, ஜாதிபெயர் கூறி மிரட்டியதாக மாணவரின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் 3 மாணவர்கள் மற்றும் விடுதி காப்பாளர் மீது போக்சோ சட்டம், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். டி.எஸ்.பி., சுகுமாறன் தலைமையில் விசாரணை நடக்கிறது.

