/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அத்துமீறும் கனரக வாகனங்கள் மீண்டும் அச்சத்தில் மாணவர்கள்
/
பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அத்துமீறும் கனரக வாகனங்கள் மீண்டும் அச்சத்தில் மாணவர்கள்
பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அத்துமீறும் கனரக வாகனங்கள் மீண்டும் அச்சத்தில் மாணவர்கள்
பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அத்துமீறும் கனரக வாகனங்கள் மீண்டும் அச்சத்தில் மாணவர்கள்
ADDED : அக் 25, 2024 05:01 AM
பரமக்குடி: பரமக்குடி- எமனேஸ்வரம் வைகை ஆறு தரைப்பாலம் பகுதியில் மீண்டும்அத்துமீறி செல்லும் கனரக வாகனங்களால் பள்ளி மாணவர்கள் அச்சமடைகின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் வைகை ஆற்றின் மறுகரையான எமனேஸ்வரம் பகுதியில் 10 வார்டுகள் அமைந்துள்ளது. பல ஆயிரம் மாணவர்கள் எமனேஸ்வரத்தில் இருந்து பரமக்குடிக்கு பள்ளிக்கு வருகின்றனர்.
இதேபோல் தினமும் பணிக்கு செல்வோர், கூலி வேலை பார்ப்பவர்கள் இந்த தரைப்பாலத்தை மட்டுமே நம்பி இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலத்தில் தடுப்புகள் இல்லாத நிலையில் டிராக்டர் மோதி பள்ளி மாணவி ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
அன்று முதல் இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில்தற்போது வாகனங்கள் அத்துமீறி செல்லும் நிலை இருக்கிறது. இரவு நேரங்களில் இங்குள்ள தடுப்புகளை சிலர் அகற்றி எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் உள்ளே நுழைய முடியாதபடி இருந்த நிலையில் தடுப்பு சுவற்றை இடித்தபடி செல்கின்றனர். இதனால் மீண்டும் பள்ளி மாணவர்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
காலை, மாலை நேரங்களில் தரைப்பாலத்தில் ஏராளமான மக்கள் கூட்டமாக செல்லும் நிலையில் இது போன்ற வாகனங்களால் மீண்டும் பொது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே நகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீசார்இணைந்து கனரக வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.