ADDED : நவ 15, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு திருவாடானை கிரிடிட் அக்சஸ் கிராமின் கூட்டா மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.2.50 லட்சத்தில் பெஞ்ச் மற்றும் நாற்காலிகள் வழங்கபட்டது.
தாசில்தார் அமர்நாத் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் முருகன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பால்ராஜ், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.