ADDED : ஜன 06, 2024 09:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஏட்டு செல்வபிரசாத் 38. மூன்று மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை போலீஸ் ஸ்டேஷனில் பொறுப்பேற்றார். நேற்று முன்தினம் திருவாடானை கருமொழி சோதனை சாவடியில் பணியில் இருந்தார்.
இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி இரவு ரோந்து சென்று ஆய்வு செய்த போது செல்வபிரசாத் மதுபோதையில் துாங்கியது தெரிந்தது.
திருவாடானை அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தது உறுதியானது. எஸ்.பி., தங்கதுரைக்கு தெரிவிக்கப்பட்டது. செல்வபிரசாத்தை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.