sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா: கோவில் நடையடைப்பு

/

ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா: கோவில் நடையடைப்பு

ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா: கோவில் நடையடைப்பு

ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா: கோவில் நடையடைப்பு


ADDED : டிச 24, 2024 11:58 PM

Google News

ADDED : டிச 24, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்ததால் கோயில் நடையடைக்கப்பட்டது.

நேற்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:30 முதல் 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜையும் நடந்தது. பின் காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகினர்.

கோயில் நான்கு ரத வீதி, திட்டக்குடி வர்த்தகன் தெரு, மேலத்தெரு வழியாக சுவாமி, அம்மன் வீதி உலா சென்று ஜீவராசிகளுக்கு படியளத்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் ஜீவராசிகள் உட்கொள்ள வாசலில் அரிசி, நவதானியங்களை துாவி சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.

பின் மதியம் 12:30 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு சென்றனர். இதனால் காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது.

--






      Dinamalar
      Follow us