/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் வழக்கு; ஜூலை 30க்கு தள்ளிவைப்பு
/
பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் வழக்கு; ஜூலை 30க்கு தள்ளிவைப்பு
பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் வழக்கு; ஜூலை 30க்கு தள்ளிவைப்பு
பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் வழக்கு; ஜூலை 30க்கு தள்ளிவைப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:51 PM
ராமநாதபுரம்; பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய ராணுவ ரகசியங்களை திருட உதவியாக இருந்த இலங்கை, மலேசிய நாட்டை சேர்ந்தவர்கள் மீதான வழக்கு ஜூலை 30க்கு தள்ளி வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் மேற்கு தெருவை சேர்ந்தவர் சித்திகலைஹா 52, இவரது அக்காள் கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40, அவரது மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
இவர்கள் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியில் வசிக்கும் சித்திகலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கியிருந்தனர். இவர்கள் இந்தியர்கள் என சித்தி கலைஹா தனது ரேஷன் கார்டில் முகமதுயாசீர் தம்பி என்றும், பாரிகா ரிஸ்மியா மருமகள் என அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை தெரிவித்து சேர்த்துள்ளார். இவர்களுக்கு ஆதார்கார்டு பெற்று தந்துள்ளார்.
இந்த போலி ஆதார் கார்டு மூலம் இரண்டு சிம்கார்டுகளை முகமது யாசிர் பெற்று பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவி என்பவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமான ஆர்மி பப்ளிக் ஸ்கூல் என்ற லோகோவை பயன்படுத்தி ராணுவ அதிகாரிகளின் அலைபேசிக்கு மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளனர். அலைபேசிகளை ேஹக் செய்து அதில் உள்ள தகவல்களை அழித்துள்ளனர். இது குறித்து தகவல் தெரிந்த கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்திகலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முகமது மிப்லால் மவுலவி மட்டும் தலைமறைவானார். மற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் வந்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சித்திகலைஹா, முகமதுயாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல் ரஷீத் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் மாவட்ட தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். நீதிபதி மெஹபூப் அலிகான் வழக்கின் விசாரணையை ஜூலை 30 க்கு தள்ளி வைத்தார்.