sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெயரளவில் ஜல்-ஜீவன் திட்டம் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்

/

பெயரளவில் ஜல்-ஜீவன் திட்டம் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்

பெயரளவில் ஜல்-ஜீவன் திட்டம் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்

பெயரளவில் ஜல்-ஜீவன் திட்டம் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்


ADDED : ஜூலை 01, 2025 02:35 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஜல்--ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்களில் குடிநீர் வராததால் விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.

உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்கு பொதுமக்கள் விவசாயம், கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் போதுமான அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

கடந்தாண்டு உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு ஒரு சில தினங்கள் மட்டுமே குழாயில் குடிநீர் வந்தது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் வராமல் நிறுத்தம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளி பஞ்சவர்ணம் கூறியதாவது, குழாயில் ஒருசில நாட்கள் மட்டும் வரும் தண்ணீரை பிடிப்பதற்காக கிராம மக்கள் போட்டி போட்டு பிடித்து செல்கின்றனர்.

நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகிறோம். எனவே அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us