sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பேரூராட்சியுடன் இணைக்க  காக்கூர் மக்கள் எதிர்ப்பு 

/

பேரூராட்சியுடன் இணைக்க  காக்கூர் மக்கள் எதிர்ப்பு 

பேரூராட்சியுடன் இணைக்க  காக்கூர் மக்கள் எதிர்ப்பு 

பேரூராட்சியுடன் இணைக்க  காக்கூர் மக்கள் எதிர்ப்பு 


ADDED : ஜன 13, 2024 04:41 AM

Google News

ADDED : ஜன 13, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : முதுகுளத்துார் பேரூராட்சியுடன் காக்கூர் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

காக்கூர் ஊராட்சி தலைவர் ஜெயமணி, ஊர் தலைவர்கள் தமிழரசன், முனியசாமி மற்றும் ஊர் மக்கள் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

முதுகுளத்துாரில் இருந்து 6 கி.மீ.,ல் காக்கூர் ஊராட்சி உள்ளது. இங்கு 1000 குடும்பங்களில் 4000த்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயத் தொழில் பிரதானமாக உள்ளது. ஏராளமானவர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் முதுகுளத்துார் பேரூராட்சியுடன் காக்கூரை இணைத்தால் நுாறு நாள் வேலை பறிபோகும். கூடுதல் வரிச்சுமையால் மக்கள் சிரமப்படுவோம். எனவே இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us