ADDED : நவ 07, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி புல்லந்தை முதல் மங்களேஸ்வரி நகர் வரை மின்கம்பங்களில் தெரு விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்துள்ளது.
இதனால் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். அலைபேசி லைட் வெளிச்சத்தில் சாலையை கடக்கின்றனர்.
எனவே மாயாகுளம் ஊராட்சி நிர்வாகத்தினர் மின்கம்பங்களில் போதிய மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

