sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அடங்கல் கிடைக்காததால் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

/

அடங்கல் கிடைக்காததால் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

அடங்கல் கிடைக்காததால் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

அடங்கல் கிடைக்காததால் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு


ADDED : நவ 07, 2025 11:17 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே செல்லுார் பகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு அடங்கல் கிடைக்காததால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமத்தில் நெல், மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர்.

நடப்பாண்டிற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,க்களிடம் அடங்கல் சான்று பெற விவசாயிகள் தினந் தோறும் வி.ஏ.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகத்திற்கு சென்று அடங்கல் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட செல்லுார், முத்துராமலிங்கபுரம் பட்டி கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., இதுவரை அடங்கல் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

தினந்தோறும் விவசாயப் பணியை விட்டுவிட்டு அடங்கல் பெறுவதற்காக அலுவலகங்களில் காத்திருக்கின்றனர்.

நவ.,15 பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடைய இன்னும் சில நாட்கள் இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

செல்லுார் பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர்.

எனவே விவசாயிகளின் நலன் கருதி பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான அடங்கல் வி.ஏ.ஓ., விரைவில் வழங்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us