/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்து நாட்களாக இருள் சூழ்ந்த கிராமம்
/
பத்து நாட்களாக இருள் சூழ்ந்த கிராமம்
ADDED : நவ 02, 2024 08:16 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே ஏ. உசிலங்குளம் ஊராட்சி எஸ்.இலந்தைகுளத்தில் பத்து நாட்களாக தெருவிளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது.
எஸ்.இலந்தைகுளம் கிராமத்தில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
சாயல்குடியில் இருந்து 4 கி.மீ.,ல் உள்ள எஸ்.இலந்தைகுளத்தில் சாலையோர மின்கம்பங்கள், வடக்கு மற்றும் மேற்கு பகுதி மின் கம்பங்களில் தெருவிளக்குகள் இன்றி இருள் சூழ்ந்துள்ளவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எஸ்.இலந்தைகுளம் மக்கள் கூறியதாவது:
கம்பங்களில் தெரு விளக்குகள் இருந்தும் எரியாமல் உள்ளன.
விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

