sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 தொண்டியில் ரவுண்டானா இல்லாததால் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்

/

 தொண்டியில் ரவுண்டானா இல்லாததால் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்

 தொண்டியில் ரவுண்டானா இல்லாததால் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்

 தொண்டியில் ரவுண்டானா இல்லாததால் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்


ADDED : டிச 31, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா இல்லாததால், தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.

தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நம்புதாளை, தொண்டி, திருவாடானை மூன்று ரோடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது. ராமநாதபுரம்--பட்டுக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையாகவும், மதுரை -- தொண்டி தேசிய நெடுஞ்சாலையாக சந்திக்கும் இடமாக உள்ளது.

வாகனங்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிரிவு சாலையில் அதிக வேகமாக தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்துக்களும் நடக்கிறது.

இதற்கு தீர்வாக சந்திப்பின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை பிரித்து விடுவதே பிரச்னைக்கு தீர்வாகும். தொண்டி மாலிக் கூறுகையில், இரவில் மாடுகள் ஓய்விடமாக இந்த இடம் உள்ளது. ஏராளமான மாடுகள் ஆங்காங்கே படுத்துள்ளது. வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாகனங்கள் வேகத்தை கட்டுபடுத்தும் விதமாக ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us