sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்; 6056 மாணவருக்கு வழங்கப்பட்டது

/

மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்; 6056 மாணவருக்கு வழங்கப்பட்டது

மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்; 6056 மாணவருக்கு வழங்கப்பட்டது

மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்; 6056 மாணவருக்கு வழங்கப்பட்டது


ADDED : ஜன 02, 2025 11:21 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை; அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு 6056 மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு டிச.23ல் நிறைவு பெற்று 24 முதல் ஜன.1 வரை ஒன்பது

நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் வட்டார கல்வி அலுவலரிடமிருந்த மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வட்டார அளவில் இவற்றை பிரிக்கும் பணி முடிந்து தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.

நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு இப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், திருவாடானை வட்டாரத்தில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப்பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 112 பள்ளிகள் உள்ளன.

இப்பள்ளிகளில் படிக்கும் 6056 மாணவர்களுக்கு நேற்று பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது என்றனர்.






      Dinamalar
      Follow us