sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வெளிநாடுகளில் மீன் பிடி தடைகாலம்ஆயிரம் மீனவர்கள் தாயகம் திரும்பினர்

/

வெளிநாடுகளில் மீன் பிடி தடைகாலம்ஆயிரம் மீனவர்கள் தாயகம் திரும்பினர்

வெளிநாடுகளில் மீன் பிடி தடைகாலம்ஆயிரம் மீனவர்கள் தாயகம் திரும்பினர்

வெளிநாடுகளில் மீன் பிடி தடைகாலம்ஆயிரம் மீனவர்கள் தாயகம் திரும்பினர்


ADDED : ஏப் 18, 2025 02:39 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:வெளி நாடுகளில் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

வெளி நாடுகளிலும் மீன்பிடி தடைகாலம் உள்ளது. மீன்களின் இனப்பெருக்கம் காலம், மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பக்ரைன், துபாய், சவூதி அரேபியா போன்ற பல வெளிநாடுகளில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கம் போல் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படும் போது மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு தடைகாலம் முடிந்தவுடன் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். ஏப்.,1ல் தடைகாலம் அறிவிக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

இங்கு வந்த மீனவர்கள் மற்ற நாட்டுப்படகு மீனவர்களுக்கு உதவியாக கடலுக்கு சென்று மீன் பிடிப்பார்கள். மீன்பிடி தடைகாலம் முடிந்தவுடன் ஜூன், ஜூலையில் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்வார்கள்.

இது குறித்து முள்ளிமுனை மீனவர்கள் கூறுகையில், ''தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படும் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் நிவாரணத் தொகை வழங்குவதில்லை,'' என்றனர்.






      Dinamalar
      Follow us