sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ரெகுநாதபுரத்தில் இன்று ஆராட்டு விழா பள்ளி வேட்டை புறப்பாடு நடந்தது

/

 ரெகுநாதபுரத்தில் இன்று ஆராட்டு விழா பள்ளி வேட்டை புறப்பாடு நடந்தது

 ரெகுநாதபுரத்தில் இன்று ஆராட்டு விழா பள்ளி வேட்டை புறப்பாடு நடந்தது

 ரெகுநாதபுரத்தில் இன்று ஆராட்டு விழா பள்ளி வேட்டை புறப்பாடு நடந்தது


ADDED : டிச 27, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் நடப்பதை போன்று ஒவ்வொரு விழாக்களும் கோலாகலமாக நடந்து வருகிறது. கார்த்திகை முதல் நாளன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கி ஐயப்ப பூஜையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயில் முன்புறமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட பெரிய கொடி மரத்தில் டிச., 18 ல் கொடிப் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை குருசாமி மோகன் சரணகோஷம் முழங்க கொடிப் பட்டம் ஏற்றி வைத்தார். பின்னர் பூதபலி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது.

நேற்று அதிகாலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனையும், மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் உற்ஸவ மூர்த்தியான வல்லபை ஐயப்பன் பள்ளி வேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

மேளதாளங்கள் முழங்க ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடியவாறு ரெகுநாதபுரம் நகர் வீதியில் உலா வந்தனர்.

இரவில் கூட்டு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று அதிகாலையில் கோபூஜையும், ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளல் மற்றும் கோயில் அருகே உள்ள பஸ்மகுளத்தில் உற்ஸவமூர்த்திக்கு ஆராட்டு நிகழ்ச்சி, மகா அபிஷேகம், அன்னதானம் உள்ளிட்டவைகளும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us