/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காரங்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
காரங்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
UPDATED : ஜன 15, 2025 06:44 AM
ADDED : ஜன 14, 2025 08:05 PM

திருவாடானை:பொங்கல் விடுமுறையை முன்னிட்டு காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் பயணிகள் உற்சாகமாக படகில் சென்றனர்.
தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையால் நேற்று பயணிகள் வருகை அதிகரித்தது. பாதுகாப்பு உடையணிந்து படகில் உற்சாகமாக சென்றனர்.