sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

/

ரோட்டில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூலை 19, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் - பரமக்குடி ரோடு கீழத்துாவல் அருகே பலத்த காற்றுக்கு ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முதுகுளத்துாரில் இருந்து வெண்ணீர்வாய்க்கால், விளங்குளத்துார், கீழத்துாவல், கீழக்கன்னிச்சேரி வழியாக பரமக்குடி செல்லும் ரோடு உள்ளது. இங்கு ரோட்டின் இருபுறங்களிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏராளமான மரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது முதுகுளத்துார் பகுதியில் நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியது. கீழத்துாவல் அருகே ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் முறிந்து விழுந்தது. முதுகுளத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் மாடசாமி தலைமையில் வீரர்கள் மரக் கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் முதுகுளத்துார் பரமக்குடி ரோட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பரமக்குடியில் இருந்து முதுகுளத்துார் நோக்கி வந்த பஸ் மகிண்டி, சூரங்குளம் வழியாக முதுகுளத்துாருக்கு மாற்று வழியில் சென்றனர்.






      Dinamalar
      Follow us