ADDED : அக் 07, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் செய்யாலுார் கிராமத்தில் உள்ள போதி வித்யாலயா சி.பி.எஸ்.சி., பள்ளி நிறுவனர் விஜயன் பிறந்தநாளை முன்னிட்டு, நிறுவனர் தினம், மரக்கன்று நடும் விழா கொண்டாடப்பட்டது.
ஆர்.கே., சாமி கல்வி அறக்கட்டளை தலைவர் விஜிதா யோகநந்தினி தலைமை வகித்தார்.
செய்யாலுார் ஊராட்சி முன்னாள் தலைவர் நவாஸ்கான், அச்சுந்தன்வயல் ஊராட்சி முன்னாள் தலைவர் சசிகலா முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 450 மரக்கன்றுகன் நடப்பட்டன. பள்ளி முதல்வர் ஜெயந்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.