sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கை போலீஸ்காரர் மீதான விசாரணை நவ.25க்கு தள்ளிவைப்பு

/

இலங்கை போலீஸ்காரர் மீதான விசாரணை நவ.25க்கு தள்ளிவைப்பு

இலங்கை போலீஸ்காரர் மீதான விசாரணை நவ.25க்கு தள்ளிவைப்பு

இலங்கை போலீஸ்காரர் மீதான விசாரணை நவ.25க்கு தள்ளிவைப்பு


ADDED : நவ 04, 2024 11:02 PM

Google News

ADDED : நவ 04, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; போதைப்பொருள் திருடி தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு விசாரணை, ராமநாதபுரம் நீதிமன்றம் நவ.,25க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கொழும்பு சபுகஸ்கந்த பகுதியில் ஒரு மரக்கடையில் இருந்து 2020- ஆக.,26-ல் இலங்கை போலீசார், 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதுதொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் அளித்த தகவலின்படி அனுரகுமார என்பவரையும் போலீசார் பிடித்தனர். இவர் இலங்கை துறைமுக போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன் ஆவார்.

பிரதீப்குமார் பண்டாரா தான் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை தனது பணி நேரத்தில் திருடி தனது சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம், என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.

இதனால் பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர். இதுபற்றி அறிந்த அவர் பைபர் படகு மூலம் தமிழகம் தப்பிவந்தார்.

2020ல் செப்., 4 ல் மண்டபம் கடலோர போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று, திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பிரதீப் குமார் பண்டாரா நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையை நவ.,25ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us