/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.4.67 கோடி தங்கம் பறிமுதல் இருவர் கைது
/
ரூ.4.67 கோடி தங்கம் பறிமுதல் இருவர் கைது
ADDED : அக் 03, 2025 03:05 AM
ராமேஸ்வரம்:இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு கடத்த முயன்ற ரூ.4.67 கோடி தங்கக்கட்டிகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
இலங்கை கல்பட்டியா கடலில் ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் சந்தேகத்திற்கிடமான இலங்கை பைபர் கிளாஸ் படகை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். படகில் 4 கிலோ 454 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.4.67 கோடி. தங்க கட்டிகளை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் இருவரை கல்பட்டியா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தங்க கட்டிகளை கடத்தி வந்து தனுஷ்கோடி கடலில் நாட்டுப்படகில் காத்திருக்கும் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். இவற்றை பெற்றுக்கொள்ள இருந்த ராமேஸ்வரம் பகுதி கடத்தல்காரர்கள் யார் என மத்திய, மாநில உளவுப் போலீசார் விசாரிக்கின்றனர்.