sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் 'ரேக்'களில் டூவீலர்கள்; ஆக்கிரமிப்பால் ஆபத்து

/

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் 'ரேக்'களில் டூவீலர்கள்; ஆக்கிரமிப்பால் ஆபத்து

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் 'ரேக்'களில் டூவீலர்கள்; ஆக்கிரமிப்பால் ஆபத்து

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் 'ரேக்'களில் டூவீலர்கள்; ஆக்கிரமிப்பால் ஆபத்து


ADDED : டிச 01, 2024 11:57 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி; பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் ரேக்குகளை டூவீலர்களை ஆக்கிரமித்து நிறுத்தி வைப்பதால் பயணிகள் நெரிசலுக்கு ஆளாகி விபத்து அபாயம் உள்ளது.

பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் நுழைந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது.

இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் நகராட்சி சார்பில் டூவீலர் நிறுத்துமிடம் செயல்படுகிறது. இங்கு இட வசதி குறைவாக இருப்பதால் நெரிசலான இடத்தில் பல ஆயிரம் டூவீலர்களை நிறுத்தி வைக்கின்றனர்.

தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் டவுன் பஸ்கள் நிறுத்த, டூவீலர் ஸ்டாண்ட் அருகில் ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தினமும், ஏராளமான கார்கள், டூவீலர்களை வரிசை கட்டி நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் ரேக்குகளில் பஸ்களை நிறுத்த முடியாமல் வழித்தடங்களில் நிறுத்தும்படி இருக்கிறது. அப்போது ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து பஸ்கள் வரும்பொழுது பயணிகள் ஏறி இறங்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

தொடர்ந்து குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பஸ் நிறுத்தும் இடத்தை தேடி அலைவதால் பயணிகள் விபத்து நடக்க வாய்ப்புள்ளது.

எனவே டூவீலர் ஸ்டாண்டை முறைப்படுத்துவதுடன், பஸ் நிறுத்தும் ரேக்குகளில் நிறுத்தும் டூவீலர்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து 'லாக்' மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us