sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மிளகாய்க்கு வேளாண் காப்பீட்டு  தொகை வழங்க வலியுறுத்தல்

/

மிளகாய்க்கு வேளாண் காப்பீட்டு  தொகை வழங்க வலியுறுத்தல்

மிளகாய்க்கு வேளாண் காப்பீட்டு  தொகை வழங்க வலியுறுத்தல்

மிளகாய்க்கு வேளாண் காப்பீட்டு  தொகை வழங்க வலியுறுத்தல்


ADDED : ஏப் 05, 2025 05:59 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பருவம் தவறிய மழை மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குண்டு, சம்பா ரக மிளகாய்க்கு தேசிய வேளாண் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் நிறுவனத் தலைவர் பாக்கியநாதன் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 16,500 எக்டேரில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது.

கார்த்திகையில் நடவு செய்து தை மாதம் வரை தொடர் மழை மற்றும் பல்வேறு நோய்களால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக தேரிருவேலி, காக்கூர், கருமல், உலையூர், தாளியேரந்தல், கடம்போடை, வளநாடு, கோடரியேந்தல், பொக்கனாரேந்தல் போன்ற இடங்களில் கடன் வாங்கி செலவு செய்த விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் இன்றி சிரமப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு குவிண்டால் ரூ.3000 வரை மிளகாய் வத்தல் விலை போனது. தற்போது விலை குறைந்து ரூ.1500, ரூ.2000க்கு விற்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் நுாறு சதவீதம் மிளகாய் பயிர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us