sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 அபிராமத்தில் இருந்து முதுகுளத்துார் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்

/

 அபிராமத்தில் இருந்து முதுகுளத்துார் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்

 அபிராமத்தில் இருந்து முதுகுளத்துார் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்

 அபிராமத்தில் இருந்து முதுகுளத்துார் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 01, 2025 07:07 AM

Google News

ADDED : டிச 01, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: -அபிராமத்தில் இருந்து முதுகுளத்துார் செல்லும் ரோட்டில் நாள்தோறும் வாகனஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் சிரமப்படுகின்றனர். எனவே புறவழிச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமுதி அருகே அபிராமம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பஸ் ஸ்டாண்ட், பஜார் சுற்றியுள்ள ரோட்டில் 100க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன.

அபிராமத்தில் இருந்து முதுகுளத்துார் செல்லும் ரோட்டில் பேட்டை தெரு, முஸ்லிம் பஜார், செவ்வல் தோட்டம் பகுதியில் குறுகலான ரோடு என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

அபிராமம் -முதுகுளத்தூர் ரோடு பேட்டை தெரு வழியாக செவ்வல்தோட்டம் வரை 2 கி.மீ., குறுகலான ரோடு என்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

இப்பகுதியை கடக்க நீண்ட நேரம் ஆகிறது.

போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வழிவிட்டு செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர்.

நாள்தோறும் வாகனஓட்டிகள் அவதிப்படும் சூழ்நிலை தொடர்கிறது. முதுகுளத்துாரில் இருந்து மதுரை செல்லும் சிலர் அபிராமம் செல்லாமல் கண்ணாத்தான் முக்குரோட்டில் இருந்து பிரிந்து 5 கி.மீ., சுற்றி மதுரை செல்லும் ரோடு வழியாக செல்கின்றனர்.

எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us