sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிராமங்களில் வீணாகும் குப்பை குழித் திட்டம் அரசு நிதி வீணடிப்பு

/

கிராமங்களில் வீணாகும் குப்பை குழித் திட்டம் அரசு நிதி வீணடிப்பு

கிராமங்களில் வீணாகும் குப்பை குழித் திட்டம் அரசு நிதி வீணடிப்பு

கிராமங்களில் வீணாகும் குப்பை குழித் திட்டம் அரசு நிதி வீணடிப்பு


ADDED : பிப் 18, 2025 04:59 AM

Google News

ADDED : பிப் 18, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை குழி அமைத்தல் திட்டம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சுவர்கள் சேதமடைந்துள்ளதால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.

முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் ஊராட்சி சார்பில் பல்வேறு கிராமங்களில் அந்தந்த கிராமங்களை பொறுத்து நிதிகள் ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதத்திற்கு முன்பு புதிதாக இரண்டு அடிக்கு சுவர்கள் அமைத்து குப்பை குழி அமைத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது முதுகுளத்துார் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள சுவர்கள் சேதமடைந்து வீணாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் திட்டத்தால் எந்த ஒரு பயனும் இல்லை. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்து குப்பை குழி அமைத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து முறையாக பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்து அரசு நிதிகளை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us