/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் கலக்கும் கழிவு சுகாதார சீர்கேடு
/
கடலில் கலக்கும் கழிவு சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 15, 2024 05:09 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் குடியிருப்பு பகுதியில் இருந்து கடலில் நேரடியாக கலந்து வரும் கழிவு நீரால் கடல் மாசுபடும் அபாயம் உள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதியான தேவிபட்டினத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கடலில் விடப்படுகிறது. இந்த கழிவு நீர் கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவு உள்ளிட்ட அனைத்து கழிவுகள் கலப்பதால் கடலில் உள்ள பவளப் பாறைகளில் கழிவு நீர் படிந்து கடல் மாசுபடுகிறது. இதனால், கடலில் உள்ள அரியவகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடல் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.
குடியிருப்பு பகுதியில் இருந்து கடலில் நேரடியாக விடப்படும் கழிவுநீர் கால்வாய்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

