ADDED : ஜூன் 07, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளை சந்தனம் பூசி, மாலை அணிவித்து சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
தலைமையாசிரியர் காவேரிமணி, மேலாண்மைக்குழு தலைவி சுபாஷினி, உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர் சண்முகபிரியா நன்றி கூறினார்.