sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயணியர் நிழற்குடை அமைப்பது எப்போது

/

பயணியர் நிழற்குடை அமைப்பது எப்போது

பயணியர் நிழற்குடை அமைப்பது எப்போது

பயணியர் நிழற்குடை அமைப்பது எப்போது


ADDED : அக் 22, 2025 12:56 AM

Google News

ADDED : அக் 22, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் -ராமநாதபுரம் ரோடு தேரிருவேலியில் பயணியர் நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் மக்கள் சிரமப்படுகின்றனர்.

முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல், அணிகுருந்தான் கடம்போடை உட்பட அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, அத்தியாவசிய தேவைக்கு பொருட்கள் வாங்குவது கூட பஸ்சில் செல்வதற்கு தேரிருவேலியில் காத்திருந்து முதுகுளத்துார், ராமநாதபுரம், பரமக்குடி செல்கின்றனர்.

இங்கு பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில் மழைக்காலங்களில் சாலையோரத்தில் காத்திருந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரோட்டோரத்தில் இருந்த கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரோடு அகலமாக உள்ளது. ஆனால் தற்போது வரை பயணியர் நிழற்குடை கட்டப்படவில்லை.

தினந்தோறும் மக்கள் ரோட்டோரத்தில் ஆபத்தான நிலையில் காத்திருந்து செல்கின்றனர். எனவே தேரிருவேலியில் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us