sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புதிய பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்

/

புதிய பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்

புதிய பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்

புதிய பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்


ADDED : ஜூலை 05, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ள நிலையில் அதன் அருகில் உள்ள பழைய பாலமும் புதிய பாலத்திற்கு நிகராக வர்ணம் பூசப்பட்டுள்ளது.

முதுகுளத்துார் பரமக்குடி ரோட்டில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு வரத்து கால்வாயை கடந்து செல்வதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது.

அவ்வப்போது மேம்பாலம் பராமரிப்பு பணி மட்டும் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அவசர நேரங்களில் வழிவிட்டு செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்களில் சிரமப்பட்டு வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.85 கோடியில் வரத்து கால்வாய் கடந்து செல்ல ஒருவழி பாதையாக மாற்றுவதற்காக புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுள்ளது. கடந்த 5 மாதத்திற்கும் மேலாக எந்த பணியும் நடைபெறாமல் புதிய மேம்பாலம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.

இதனால் பாலம் கட்டப்பட்டும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே முதுகுளத்துார் பரமக்குடி ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் பணிகளை முழுவதுமாக முடித்து விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் புதிய பாலத்திற்கு நிகராக அதன் அருகில் உள்ள பழைய பாலத்திற்கும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது.






      Dinamalar
      Follow us