sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிணறு தோண்டிய போது மண் சரிந்து தொழிலாளி பலி

/

கிணறு தோண்டிய போது மண் சரிந்து தொழிலாளி பலி

கிணறு தோண்டிய போது மண் சரிந்து தொழிலாளி பலி

கிணறு தோண்டிய போது மண் சரிந்து தொழிலாளி பலி


ADDED : பிப் 21, 2024 06:32 AM

Google News

ADDED : பிப் 21, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்தில் தொழிலாளி புதைந்து பலியானார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் 64. இவரது தோட்டத்தில் நேற்று காலை கிணறு தோண்டும் பணி நடந்தது. அப்போது நிலமழகிய மங்கலம் கிராமத்தை சேர்ந்த வீரகுமார் 54, சித்தம்பூரணி அருளானந்து 38, இருவரும் கிணற்றில் இறங்கி மண்வெட்டியால் வெட்டி மணல் அள்ளினர்.

அந்த மணலை சித்தம்பூரணி தாஸ் 45, ராஜ்குமார் 26, ஆகிய இருவரும் கூடையில் வாங்கி கிணற்றின் ஓரமாக கொட்டினர். அப்போது திடீரென மண் சரிந்து உள்ளே விழுந்தது. இதில் வீரக்குமார் மணலுக்குள் சிக்கி மூச்சுத்திணறி பலியானார். அருளானந்து காயமடைந்தார்.

திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் வீரர்கள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மணலை அள்ளி வீரகுமார் உடலை மீட்டனர். வீரகுமாருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us