ADDED : ஆக 09, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு இரு நாட்கள் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமை வகித்தார். குழந்தைகள் நல மருத்துவத்துறை தலைவர் டாக்டர் செய்யது இப்ராஹிம், டாக்டர் ரஹ்மத் அஜிதா, செவிலியர் கல்லுாரி கண்காணிப்பாளர் ஷீலா பேசினர்.
ஓவியம், வினாடி வினா போட்டிகளில் வென்ற செய்யது அம்மாள் நர்சிங் பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கர்ப்பிணிகள், தாய்மார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.