/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எக்ஸ்ரே பிரிவில் பணியாளர் பற்றாக்குறையால் பாதிப்பு
/
எக்ஸ்ரே பிரிவில் பணியாளர் பற்றாக்குறையால் பாதிப்பு
எக்ஸ்ரே பிரிவில் பணியாளர் பற்றாக்குறையால் பாதிப்பு
எக்ஸ்ரே பிரிவில் பணியாளர் பற்றாக்குறையால் பாதிப்பு
ADDED : டிச 21, 2024 06:49 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் தற்போது நான்கு பணியாளர்கள் உள்ளனர். ஒருவர் மட்டுமே நிரந்தர பணியாளர் மற்ற 3 பேரும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள்பணிபுரிகின்றனர்.
டிஜிட்டல் எக்ஸ்ரே, நகரும் எக்ஸ்ரே இயந்திரங்கள் என அதி நவீன வசதிகள் கொண்டிருந்தாலும் 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது.
சாரசரியாக ஒரு நாள் ஒன்றுக்கு 50 முதல் 80 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது.
பணியாளர்கள் பற்றாக்குறையால் பணிச்சுமையில்பாதிக்கப்பட்டுள்ளனர். எக்ஸ்ரே எடுப்பதற்காக வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கூடுதல் தொழில் நுட்ப பணியாளர்களை எக்ஸ்ரே பிரிவில் நியமிக்க வேண்டும்.