/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புனித பயணத்திற்கு மானியம் பெறலாம்
/
புனித பயணத்திற்கு மானியம் பெறலாம்
ADDED : அக் 30, 2025 03:52 AM
ராமநாதபுரம்: தமிழகத்தைச் சேர்ந்த 150 பவுத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு 2025--26ம் ஆண்டில் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தர்ம சக்கர பரிவர்த்தன திரு விழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு இ.சி.எஸ்., முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தில் பயணம் மேற்கொள்ளலாம்
இதற்கான விண்ணப்ப படிவத்தை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவ.,30க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பராம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

