ADDED : பிப் 10, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை மேற்குதெருவை சேர்ந்தவர் யாசர்அராபத் மகன் முகமதுநபில் 21. ஓட்டலில் வேலைபார்த்தார். தொண்டியிலிருந்து சோலியக்குடியை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலரில் சென்றார்.
நம்புதாளை குளம் அருகே நேற்று மதியம் 2:00 மணிக்கு ராமநாதபுரத்திலிருந்து தொண்டியை நோக்கி இறால் மீன்களுக்கு தீவனம் ஏற்றி சென்ற மனிலாரி மோதியது. இதில் முகமதுநபில் அதே இடத்தில் பலியானார். தொண்டி போலீசார் உத்தரகோசமங்கை அருகே நல்லாங்குடியைச் சேர்ந்த டிரைவர் ராஜேஸ் 39, கைது செய்தனர்.

