sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரை தாக்கிய மூவருக்கு வலை

/

அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரை தாக்கிய மூவருக்கு வலை

அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரை தாக்கிய மூவருக்கு வலை

அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரை தாக்கிய மூவருக்கு வலை


ADDED : ஏப் 25, 2024 09:09 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 09:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 42. அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை டூ- -வீலரில் அரிகிலப்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்றார்.

காஞ்சிபுரம் -- அரக்கோணம் நெடுஞ்சாலை கல்லாறு அருகே சென்ற போது அவரை பின் தொடர்ந்த கார் முன்னே சென்று வழிமறித்து நிறுத்தப்பட்டது.

காரில் இருந்து இறங்கிய மூவர் கட்டையால் ரமேஷை தாக்கினர்.

அப்போது அந்த வழியாக வந்தவர்கள் ரமேஷ் தாக்கப்படுவதை கண்டு தடுக்க வந்தனர். அவர்கள் வருவதை கண்ட மூவரும் காரில் ஏறி தப்பினர். படுகாயமடைந்த ரமேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us