/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சாலையில் வீசிய ரூ.76,810 பறிமுதல்
/
சாலையில் வீசிய ரூ.76,810 பறிமுதல்
ADDED : ஏப் 19, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்.டி.ஓ.,வுமான மனோன்மணி தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வாலாஜா நகர், வெற்றிலைக்கார தெருவில், அதிகாரிகளை பார்த்ததும் ஓடிய கும்பலை வாகனத்தில் பின்தொடர்ந்தனர். அப்போது அக்கும்பல், தாங்கள் வைத்திருந்த பணத்தை சாலையில் வீசி தப்பியது.
சாலையில் வீசப்பட்ட, 76,810 ரூபாயை, நிலை கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.

