sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

இறந்தவர்கள் பெயரில் கள்ள ஓட்டு பா.ம.க., வேட்பாளர் தர்ணா

/

இறந்தவர்கள் பெயரில் கள்ள ஓட்டு பா.ம.க., வேட்பாளர் தர்ணா

இறந்தவர்கள் பெயரில் கள்ள ஓட்டு பா.ம.க., வேட்பாளர் தர்ணா

இறந்தவர்கள் பெயரில் கள்ள ஓட்டு பா.ம.க., வேட்பாளர் தர்ணா


ADDED : ஏப் 20, 2024 09:30 PM

Google News

ADDED : ஏப் 20, 2024 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, இறந்தவர்களின் பெயரில், தி.மு.க.,வினர் கள்ள ஓட்டுப் போட்டதை கண்டித்து, பா.ம.க., வேட்பாளர் பாலு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.பி., ஜெகத்ரட்சகன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க., வேட்பாளர் பாலு, ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் மோட்டூர் கிராமத்தில் உள்ள நிதி உதவி தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், தி.மு.க.,வினர் இறந்தவர்களின் பெயரில், திருட்டு ஓட்டுப் போடுவதாக, பா.ம.க., வேட்பாளர் பாலுவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று, தேர்தல் அதிகாரிகளிடம் இறந்தவர் பெயரில் எப்படி ஓட்டுப் போட முடியும் என கேட்டு, வேட்பாளர் பாலு முறையிட்டார். அங்கிருந்த அதிகாரிகள், முறையாக பதில் கூறாமல் தொடர்ந்து ஓட்டுப்பதிவில் மும்முரமாக ஈடுபட்டனர்.

ஆத்திரமடைந்த பா.ம.க., வேட்பாளர் பாலு, தனது ஆதரவாளர்களுடன், ஓட்டுச்சாவடி முன் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

வேட்பாளர் பாலு கூறுகையில், ''ஓட்டுப்பதிவு மையத்தில் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்,'' என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us