/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
திருமாலீஸ்வரர் கோவிலில் வரும் 16ல் கும்பாபிஷேகம்
/
திருமாலீஸ்வரர் கோவிலில் வரும் 16ல் கும்பாபிஷேகம்
ADDED : செப் 04, 2024 12:57 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், திருமாதலம்பாக்கத்தில், 2,000 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட திரிபுரசுந்தரி உடனுறை திருமாலீஸ்வரர் கோவில் உள்ளது.
திருமால், சிவபெருமானுக்கு பூஜை செய்த ஸ்தலமான இந்த கோவிலில் பொன்னிறம் கொண்ட லிங்க திருமேனியாய் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பல்வேறு சிறப்பு கொண்ட இக்கோவிலை பழமை மாறாமல்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை துவங்குகிறது.
வரும் 16ம் தேதி, காலை 6:00 மணிக்கு திரிபுரசுந்தரி சமேத திருமாலீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்நது காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.