/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
தாய், மகள், மகன் சடலம் மீட்பு: கணவனுக்கு வலை
/
தாய், மகள், மகன் சடலம் மீட்பு: கணவனுக்கு வலை
ADDED : செப் 08, 2024 02:45 AM
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சுவால்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் விஜயன், 48; மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி மீனாட்சி, 45; அங்கன்வாடி ஊழியர்.
இவர்கள் மகள் பவித்ரா, 25, கம்ப்யூட்டர் சென்டரிலும், மகன் யுவனேஷ், 20, தனியார் டயர் தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர். அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர், விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் போன் செய்தார். அனைவரது போனும் 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது.
சந்தேகமடைந்த அவர், விஜயன் வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்றார். கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தந்தார்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, மீனாட்சி, பவித்ரா, யுவனேஷ் வீட்டுக்குள் சடலமாக கிடந்தனர். அவர்கள் சாவுக்கு காரணம் தெரியாத நிலையில், மாயமான விஜயனை, அரக்கோணம் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.