sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

50 சவரன் ரூ.2 லட்சம் கொள்ளை

/

50 சவரன் ரூ.2 லட்சம் கொள்ளை

50 சவரன் ரூ.2 லட்சம் கொள்ளை

50 சவரன் ரூ.2 லட்சம் கொள்ளை


ADDED : ஜூன் 19, 2025 09:38 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:அரக்கோணம் அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து, 50 சவரன் நகை, 2 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர், முன்னாள் ராணுவ வீரர் மதியழகன், 65. இவரது மனைவி அமுதா, 60. இவர்களது மகன், மகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். மதியழகனின் தாய் பார்வதியம்மாளுக்கு உடல்நிலை பாதித்ததால், சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடந்த, 2 நாட்களுக்கு முன் அழைத்து சென்றனர். நேற்று காலை, 7:00 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 50 சவரன், 2 லட்சம் ரூபாய், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us