sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 541 பேருக்கு புற்றுநோய்

/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 541 பேருக்கு புற்றுநோய்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 541 பேருக்கு புற்றுநோய்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 541 பேருக்கு புற்றுநோய்


ADDED : பிப் 24, 2024 12:46 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:''ராணிப்பேட்டை மாவட்டத்தில், 541 பேருக்கு ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், புதிதாக கட்டப்பட்ட சுகாதார நிலையங்களை திறந்துவைத்த அவர் பேசியதாவது:

ராணிப்பேட்டை, திருப்பத்துார், கன்னியா குமாரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில்சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலைகள் அதிகளவு உள்ளன. எனவே, இந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

இவற்றை தடுக்க புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம், கடந்த ஆண்டு நவ., 22ல், நான்கு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இதன் வாயிலாக இதுவரை பரிசோதனை செய்யப்பட்டதில், 290 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய், 222 நபர்களுக்கு மார்பக புற்றுநோய், 29 நபர்களுக்கு வாய்ப்புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இவை ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டதால், அனைவரும் குணப்படுத்தப்படுவர். கடந்த, 33 மாதங்களில் மருத்துவ துறையில், 31,000 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us