sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

காவல் நிலைய பெயர் பலகை மாயமானதால் பக்தர்கள் அவதி

/

காவல் நிலைய பெயர் பலகை மாயமானதால் பக்தர்கள் அவதி

காவல் நிலைய பெயர் பலகை மாயமானதால் பக்தர்கள் அவதி

காவல் நிலைய பெயர் பலகை மாயமானதால் பக்தர்கள் அவதி


ADDED : ஜூன் 04, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலுக்கு, நாடு முழுதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கடந்தாண்டு முதல் மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது, பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக கொண்டபாளையம் மாறியுள்ளது.

ரோப்காரில் பயணித்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள், கொண்டபாளையத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி, அதன்பின் சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

கொண்டபாளையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையில், காவல் நிலைய தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை இருந்தது. சமீபகாலமாக, அந்த அறிவிப்பு பலகையை காணவில்லை.

இதனால், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டபாளையத்திற்கு வரும் பக்தர்கள், அவசர காலத்தில் போலீசாரை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையம் செல்லும் வழியிலும் வழிகாட்டி பலகை இல்லை.

இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கொண்டபாளையத்தில் அவசர நேரத்தில் போலீசாரை தொடர்பு கொள்ள முடிவது இல்லை. மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையில், காவல் நிலைய தொடர்பு எண்கள் மற்றும் காவல் நிலைய சாலையில் வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us