sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

விபத்து தகராறில் டிரைவர் கொலை

/

விபத்து தகராறில் டிரைவர் கொலை

விபத்து தகராறில் டிரைவர் கொலை

விபத்து தகராறில் டிரைவர் கொலை


ADDED : நவ 08, 2024 02:43 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாராஞ்சியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ராஜ்குமார், 47. இவரது மனைவி பூங்கொடி, 43; இவருக்கு நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வேடல் - காந்தி நகர் இடையே சென்றபோது, எதிரே வந்த ஒரு கார், ராஜ்குமார் குடும்பத்தினர் வந்த கார் மீது மோதியது. இதில், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. எதிரே காரில் வந்தவர்கள், வேடல் பகுதியில் தங்கள் ஆதரவாளர்களை வரவழைத்து தாக்கியதில், சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பலியானார். படுகாயமடைந்த பூங்கொடி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ராஜ்குமாரை கொலை செய்தவர்களை, கைது செய்யக்கோரி, அவரது ஆதரவாளர்கள் அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் பாராஞ்சி கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர். அரக்கோணம் போலீசார் சமாதானப்படுத்தி, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us