sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

சிறுவனை வெட்டிய கொள்ளையனை கண்டித்து மக்கள் சாலை மறியல்

/

சிறுவனை வெட்டிய கொள்ளையனை கண்டித்து மக்கள் சாலை மறியல்

சிறுவனை வெட்டிய கொள்ளையனை கண்டித்து மக்கள் சாலை மறியல்

சிறுவனை வெட்டிய கொள்ளையனை கண்டித்து மக்கள் சாலை மறியல்


ADDED : டிச 05, 2024 04:41 AM

Google News

ADDED : டிச 05, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த அண்ணாமலை நகரை சேர்ந்த ராணுவ வீரர் ராஜேந்திரன் 41. இவர் மனைவி அலமேலு, 35. இவர்களது மகன் சோனு, 13.

இவர், அப்பகுதியிலுள்ள பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை, 8:30 மணிக்கு அலமேலுவும், சோனுவும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டிற்குள் ஒரு முகமூடி கொள்ளையன் புகுந்து, சோனுவின் கழுத்தில் கத்தியை வைத்து, அலமேலுவிடம், நகை மற்றும் பணத்தை தரக்கேட்டு மிரட்டினார். பயந்த அலமேலு அலறி கூச்சலிட்டார்.

அப்போது முகமூடி கொள்ளையன் கத்தியால் சிறுவனின் விரலை அறுத்தும், கையிலும் வெட்டினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் முகமூடி கொள்ளையன் அங்கிருந்து தப்பினான்.

பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் முகமூடி கொள்ளையனை கைது செய்ய வலியுறுத்தி, பனப்பாக்கம் - ஓச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

நெமிலி போலீசார் பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us