sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ரூ.8,000 லஞ்சம் வாங்கிய மின் ஊழியருக்கு 'காப்பு'

/

ரூ.8,000 லஞ்சம் வாங்கிய மின் ஊழியருக்கு 'காப்பு'

ரூ.8,000 லஞ்சம் வாங்கிய மின் ஊழியருக்கு 'காப்பு'

ரூ.8,000 லஞ்சம் வாங்கிய மின் ஊழியருக்கு 'காப்பு'


ADDED : அக் 29, 2024 09:02 PM

Google News

ADDED : அக் 29, 2024 09:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்,:ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர், அதே கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, அரக்கோணம் கோட்டம் மின்னல் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அப்போது, போர்மேன் கிருஷ்ணன் 59, என்பவர், மின் இணைப்பு வழங்க, அரசு கட்டணம் 23,000 ரூபாயை செலுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

அதன்படி, மோகன், தது தம்பி சற்குணத்திடம் பணத்தை கொடுத்து செலுத்தியுள்ளார். இந்நிலையில், போர்மேன் கிருஷ்ணன் புதிய மின் இணைப்புக்கு, 8,000 ரூபாயை தனக்கு லஞ்சமாக தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.

பணத்தை தர விரும்பாத சற்குணம், ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., கணேசனிடம் புகார் அளித்தார். அதன்படி, நேற்று ரசாயனம் தடவிய, 8,000 ரூபாயை போர்மேன் கிருஷ்ணனிடம் சற்குணம் கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் சோதனை செய்ததில், 17,610 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us