/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி சாவு
/
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி சாவு
ADDED : டிச 11, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் அரசு மருத்துவமனை டாக்டர் வசந்தகுமார்.
இவரது மகள் ஈஷா அத்விதா, 14. இவர், சுமைதாங்கி பகுதியில் செயல்பட்டு வரும் சன்பீம் தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு, மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

