sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

சோளிங்கரில் தை தெப்போற்சவம்

/

சோளிங்கரில் தை தெப்போற்சவம்

சோளிங்கரில் தை தெப்போற்சவம்

சோளிங்கரில் தை தெப்போற்சவம்


ADDED : பிப் 09, 2025 12:35 AM

Google News

ADDED : பிப் 09, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு கிழக்கில், சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.

பெரிய மலையில் அருள்பாலிக்கும் அமிர்தவல்லி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட பாதை உள்ளது. இந்நிலையில், கூடுதலாக, ரோப்கார் வசதி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தினசரி ஆயிரம் பக்தர்கள் வரை ரோப்கார் வாயிலாக மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. பிரம்ம தீர்த்தம் என்படும் தக்கான் குளம், கொண்டபாளையம் கூட்டு சாலையில் உள்ளது.

தக்கான் குளத்தில், தை மாதம் தெப்போற்சவம் நேற்று துவங்கியது. மூன்று நாள் உற்சவத்தின் முதல் நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், பக்தோசித பெருமாள் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்றும், நாளையும் தெப்ப உற்சவம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us