/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
தெலுங்கான போலீசாருக்கு அரக்கோணத்தில் பயிற்சி
/
தெலுங்கான போலீசாருக்கு அரக்கோணத்தில் பயிற்சி
ADDED : ஜன 05, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில்ல என்.டி.ஆர்.எப்., எனப்படும், தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு, தெலுங்கானா மாநில போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 36 பேருக்கு, எட்டு வார கால பேரிடர் மீட்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், முதல் நாளான நேற்று, மழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கயிறு பாலம் அமைத்து மீட்பது. உயரமான கட்டடங்களில் கயிற்றில் ஏறுவது. பேரிடர்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது என்பது குறித்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

